தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூடலூர் அருகே வீட்டின் மதில் சுவரை உடைத்து பலாப்பழத்தை ருசித்து தின்ற யானை

Advertisement

கூடலூர்: கூடலூர் அருகே வீட்டின் மதில் சுவரை உடைத்து பலாப்பழத்தை ருசித்து தின்ற யானையால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார் அக்ரஹாரம் குடியிருப்பை சேர்ந்தவர் சிவதாஸ். இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தார். இரவு 11 மணியளவில் குடியிருப்பில் புகுந்த ஒற்றை காட்டு யானை சிவதாஸ் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்து வழியாக வந்து மதில் சுவரை உடைத்து தள்ளி உள்ளே புகுந்தது. யானை மதில் சுவரை இடிக்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த சிவதாஸ் இது குறித்து வனத்துறைக்கு உடனே தகவல் அளித்தார்.

தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் அங்கு நின்ற யானை அங்கிருந்த பலாமரத்தில் பழுத்திருந்த பழங்களை பறித்து ருசித்து தின்றது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஒரு வழியாக இன்று அதிகாலை 3 மணி அளவில் அப்பகுதியில் இருந்து காட்டு யானை சென்றது. இந்த யானை தொடர்ச்சியாக நகரை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நடமாடி வருகிறது. வனத்துறையினரும் தொடர்ந்து இந்த யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகர் பகுதியில் யானை நடமாட்டம் காரணமாக குடியிருப்பவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement

Related News