தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை அருகே பரபரப்பு ஜீப்பை முட்டித்தள்ள முயன்ற காட்டு யானை

Advertisement

*சிசிடிவி காட்சி வைரல்

கோவை : கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. அவை இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம். இதனிடையே கடந்த சில நாட்களாக கெம்பனூர், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை பொம்மனம்பாளையம் கிராமத்திற்குள் புகுந்தது. அக்கிராமத்திற்குள் இரவு முழுவதும் சுற்றித் திரிந்த அந்த யானை, நேற்று அதிகாலை 2.30 மணியளவில் ரவி என்பவர் தோட்டத்திற்குள் சென்றது.

அங்கு சிறிது நேரம் இருந்த அந்த யானை, உணவு தேடி சுற்றித் திரிந்தது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.தொடர்ச்சியாக, காட்டு யானைகள் கிராமப்பகுதிக்குள் நுழைந்து விளை பயிர்களை மட்டுமின்றி, ரேஷன் அரிசி, கால்நடை தீவனங்கள் உள்ளிட்டவற்றையும் சாப்பிட்டு வருவதாகவும், காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதேபோல கடந்த 3ம் தேதி இரவு வெள்ளியங்கிரி கோயிலுக்கு செல்லும் சாலையில் உள்ள தண்ணீர்பந்தல் என்ற பகுதிக்குள் ஒற்றை ஆண் காட்டு யானை நுழைந்தது. அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் நுழைய முயன்ற யானையை, இரண்டு வாகனங்களில் வந்த வனத்துறையினர் விரட்ட முயன்றனர்.

அப்போது வனப்பகுதியை நோக்கி சென்ற காட்டு யானை திடீரென ஆக்ரோசமாக வந்து வனத்துறை ஜீப்பை முட்டித்தள்ள முயன்றது. இதையடுத்து வனத்துறையினர் ஒலி எழுப்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Related News