தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சத்தியமங்கலம் அருகே வேனை வழிமறித்து தக்காளியை சாலையில் சிதறவிட்ட யானை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே சரக்கு வேனை காட்டு யானை வழிமறித்து தும்பிக்கையால் தக்காளி பழங்களை எடுத்து சாலையில் சிதறவிட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் மற்றும் காய்கறி பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களை காட்டு யானைகள் அடிக்கடி வழிமறித்து கரும்பு மற்றும் காய்கறிகளை ருசித்து வருகின்றன.

Advertisement

இந்நிலையில், நேற்று இரவு கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிய சரக்கு வேன் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் வனப்பகுதி வழியாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஆசனூர் காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே ஒரு காட்டு யானை இந்த வேனை வழிமறித்தது. யானையை கண்ட ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தினார். இதையடுத்து யானை தனது தும்பிக்கையால் சரக்கு வாகனத்தில் பாரம் ஏற்றப்பட்டுள்ள தக்காளி பெட்டியை எடுத்து சாலையில் தள்ளியதில் ஒரு பெட்டி தக்காளி பழங்கள் முழுவதும் கீழே விழுந்து சாலையில் சிதறியது.

பின்னர் தக்காளிகளை ருசித்து சாப்பிட ஆரம்பித்தது. அப்போது சரக்கு வாகன ஓட்டுனர் சமயோசிதமாக செயல்பட்டு வாகனத்தை மெதுவாக நகர்த்தி யானையிடமிருந்து தப்பினார். காட்டு யானை வேனை வழிமறித்து அட்டகாசத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement