தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மின்சாரம் தாக்கி பால் வியாபாரி பலி

திருப்போரூர்: சென்னை அருகே தாழம்பூர், அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்(47). இவர், வீட்டிலேயே மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வீட்டின் முன் பக்கத்தில் இருந்த மாட்டுக் கொட்டகைக்குச் சென்று பால் கறந்து விட்டு மின் விளக்குகளை அணைத்துள்ளார். அப்போது, மின் கசிவு காரணமாக சுரேஷ் மீது மின்சாரம் தாக்கியதில் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார். இவரது, அலறல் சத்தம் கேட்டு அவரது தாயார் ஜெயலட்சுமி ஒடிவந்து பார்த்த போது கை கால்களை உதைத்த நிலையில் சுரேஷ் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி அலறிக் கூச்சலிட்டார். சத்தம் கேட்டுவந்த அக்கம்பக்கத்தினர் மின் இணைப்பை துண்டித்து சுரேஷை மீட்டு படூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுரேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தாழம்பூர் போலீசார் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related News