தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்சாரம் பாய்ந்து 2 ஊழியர்கள் பலி

 

Advertisement

கள்ளக்குறிச்சி: வாட்டர் சர்வீஸ் கடையில் மின்சாரம் பாய்ந்து 2 ஊழியர்கள் பலியானார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த கலையநல்லூர் சாலையில் சாஜன் என்பவர் வாட்டர் வாஷ் கடை நடத்தி வருகிறார். இங்கு தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்த அரவிந்த் (27) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஷாகில் (17) உள்ளிட்ட பலர் வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் அரவிந்த் நான்கு சக்கர வாகனத்திற்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தார்.

அப்பொழுது திடீரென எதிர்பாராத விதமாக அரவிந்த் மீது மின்சாரம் பாய்ந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஷாகில் உடனடியாக அரவிந்தை காப்பாற்றுவதற்காக அவரைபிடித்து இழுத்துள்ளார். இதனால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அரவிந்த் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

ஷாகிலுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் சக ஊழியர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை ஷாகில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News