தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்வாரிய அலுவலக சுற்றுச்சுவரில் பொதுமக்கள் கவனம் ஈர்க்கும் விழிப்புணர்வு ஏஐ போஸ்டர்கள்

மதுரை: மின்வாரிய அலுவலக சுற்றுச்சுவரில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒட்டப்பட்டுள்ள ஏஐ போஸ்டர்கள் கவனம் ஈர்த்து வருகிறது. மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் மின் பகிர்மான உதவி மின் பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் சுற்றுச் சுவரில் வடக்கிழக்கு பருவமழை போன்ற பருவ மழை காலங்களின் போது மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட படங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

Advertisement

அதில் பாதுகாப்பற்று அறுந்து கிடக்கும் மின் கம்பிகளைத் பொதுமக்கள் தொடுவதை தவிர்க்க வேண்டும், மின் கம்பங்கள் அருகே குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது, மழைகாலங்களில் மின் கம்பங்களைத் தொடக்கூடாது, சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும், இணைய வழி மோசடி அழைப்புகளை அழைப்புகளை தவிர்க்க வேண்டும், ஈரமான கைகளால் மின் சாதனங்களைத் தொடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு அம்சங்கள் அடங்கியுள்ளன. புதுவிதமான இந்த போஸ்டர்கள் அந்த வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனத்தை கவர்ந்து வருகிறது. மின் வாரியத்தின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Related News