தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேங்மேன்களை கள உதவியாளராக மாற்றக்கோரி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு : கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளராக பணி மாற்றம் வழங்ககோரி ஈரோட்டில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு ஈவிஎன் சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் (சிஐடியு) நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அந்த அமைப்பின் மண்டல செயலாளர் ஸ்ரீதேவி தலைமை தாங்கினார்.

Advertisement

சிஐடியு மாவட்ட செயலாளர் மாரப்பன், கிளை தலைவர் ஜோதிமணி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் இளங்கோ, ஜான்சன் ஆகியோர் பங்கேற்று பேசினர். இதில், கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பணி மாற்றம் வழங்க வேண்டும். 1-12-2019ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். டிஏ, ஜேஇ உள்முகத்தேர்வில் வாய்ப்பு வழங்க வேண்டும்.

சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் வழங்க வேண்டும். விடுபட்ட கேங்மேன் பணியாளர்களுக்கு பணி நியமன உத்தரவினை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில், சிஐடியு மாவட்ட துணை தலைவர் ஸ்ரீராம், ஈரோடு மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், மேட்டூர், கோபி பகுதிகளை சேர்ந்த அமைப்பின் நிர்வாகிகள், மின் வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News