தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மறியல்

*விழுப்புரத்தில் 235 பேர் கைது

Advertisement

விழுப்புரம் : மின் வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணிநிரந்தரம் செய்ய வேண்டும். உழைப்பு சுரண்டலை தொடர்ந்து செய்து, அதன்படி தனியார் கம்பெனி மூலமாக ஆள்நிரப்ப திட்டமிடும் கொள்கை முடிவைகைவிட வேண்டும். மின்வாரியத்தில் காலி பணியிடம் 62 ஆயிரம் உள்ளது.

குறிப்பாக 35ஆயிரம் களப்பிரிவில் உள்ள பணியிடங்களை நிரப்பிட ஒப்பந்த ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

அதன்படி விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் சிக்னல் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார்.

மாநில செயலாளர் அம்பிகாபதி, சிஐடியூ மூர்த்தி, மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட தலைவர் சேகர், திட்ட செயலாளர் அருள், திட்ட பொருளாளர் கண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 235 பேரை கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement