தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின் களப்பணியாளர்கள் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் ஒரே நாளில் இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை: மின்வாரியம் தகவல்

சென்னை: மின் பணியாளர்களை பொறுத்தவரை தரை வழி கேபிள் சரிப்படுத்துதல், கம்பங்களை முறைப்படுத்துதல், சேதமடைந்த மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற உயிருக்கு ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவதால் இப்பணிகளில் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என மின்வாரியம் தரப்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக பல்வேறு மின் விபத்துகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளது மட்டுமின்றி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

இதனால் மின்களப்பணியாளர்கள் முறையாக பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாற்றுவதை மேற்பார்வையிட அனைத்து மண்டல பொறியாளர்களுக்கும் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. பொதுவாக ஒரு ஊழியர்கள் விபத்தில் உயிரிழந்தால் அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் அரசால் வழங்கப்படுகின்றன. அதேபோல், இரண்டு கண்கள், கைகள் மற்றும் கால்களை இழந்தால் ரூ.3 லட்சமும், ஒரு கை,கால் மற்றும் கண்ணை இழந்தால் ரூ.1.50 லட்சமும் இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டுவருகின்றன.

இந்த தொகையை மண்டல தலைமை பொறியாளர் மூலமாக வழங்கப்படுகின்றன. ஆனால் இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் அந்த தொகைகளை வாங்க கால தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, சமீபத்தில் நடந்த உயர் அதிகாரிகள் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் விபத்தில் உயிரிழக்கும் மின்பணியாளர்களுக்கு உடனடி இழப்பீட்டு தொகையை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘ ஒரு ஊழியர் விபத்தில் இறந்தால் அவர் மின் விபத்தில் தான் உயிரிழந்தாரா அல்லது வேறு காரணம் உள்ளதா? என்பதை உறுதி செய்தும், விதிமுறைகளை பின்பற்றி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க தாமதமாகிறது. இதனை தவிரிக்க மின்விபத்தில் உயிரிழந்த பின்னர் அதனை உறுதி செய்த மறுநாள் இழப்பீடு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News