தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் இருந்து திருச்சிக்கு தீபாவளிக்கு முன்னதாக 2 மின்சார ரயில் இயக்கம்: அதிகாரிகள் தகவல்

* கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை

Advertisement

கடந்த மாதம் 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் புக் செய்யப்பட்டன

சென்னை: சென்னை - திருச்சி இடையே தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இரண்டு மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தாண்டுக்கான தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 20ம் தேதி கொண்டாடப்படவுள்ளன. இதற்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் முன்கூட்டியே தங்களின் பயணத்திட்டத்தை உறுதி செய்யும் விதமாக விமானம், ரயில், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளை முன்பதிவு செய்துள்ளனர். அந்தவகையில் ரயிலில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கடந்த மாதம் 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் புக் செய்யப்பட்டன. இதில் ஆன்லைன் மூலமாக பெரும்பாலானோர் முன்பதிவை செய்த நிலையில் ரயில் நிலையங்களில் காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில், சென்னை எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து மதுரை, கோவை, குமரி உட்பட தென்மாவட்டங்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே 11 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்தன. இதற்கு அனுமதி கிடைக்கும் நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளில் சென்னை எழும்பூர் அல்லது தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து இரண்டு மின்சார ரயில்களை (மெமு) திருச்சி வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், தீபாவளி பண்டிகைக்கு தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு தகுந்த இடவசதிகளை ஏற்படுத்தி தரும் நடவடிக்கைகளில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News