தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்வேலியில் சிக்கி பலியான 2 பேரின் உடல் கிணற்றில் வீச்சு: தோட்ட உரிமையாளர்கள் கைது

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிவலிங்காபுரத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார் (45), ரவிக்குமார் (47). இருவரும் கடந்த 31ம் தேதி சாத்தூர் அருகே வேப்பிலைபட்டியில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் நடந்த திருமணத்திற்கு சென்றனர். முதல்நாள் இரவே வந்து கோயில் மண்டபத்தில் தங்கியிருந்தனர். மறுநாள் அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகில் ெசன்றவர்கள் திரும்பி வரவில்லை.

Advertisement

இந்நிலையில், வேப்பிலைபட்டி அருகே உள்ள உறை கிணற்றில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘திருமணம் நடந்த கோயில் அருகே விவசாய தோட்டம் உள்ளது. இப்பகுதியில் இயற்கை உபாதைக்காக அதிகாலை 4 மணியளவில் சுரேஷ்குமாரும், ரவிக்குமாரும் சென்றனர்.

அப்போது காட்டுப்பன்றிகளை தடுக்க வைத்திருந்த மின்வேலியில் சிக்கி இருவரும் உயிரிழந்தனர். காலையில் தோட்டத்திற்கு வந்த உரிமையாளர்களான மணிகண்டன்(45), சுதாகர்(42) ஆகியோர் மின்வேலியில் சிக்கி 2 பேர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது வெளியில் தெரிந்தால் பிரச்னையாகி விடும் என கருதி, இருவரது உடல்களையும் டூவீலரில் தூக்கிச் சென்று உறை கிணற்றில் வீசிவிட்டு சென்றுள்ளனர். தற்போது 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றனர்.

Advertisement

Related News