தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாநில பார்கவுன்சில்களில் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்: அகில இந்திய செயலாளர் அறிவுறுத்தல்

சென்னை: தேர்தல் நடத்தப்படாத மாநில பார்கவுன்சில்களில் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்று அகில இந்திய பார்கவுன்சில் மாநில பார்கவுன்சில் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அகில இந்திய பார்கவுன்சில் முதன்மை செயலாளர் ஸ்ரீமந்த்ரோ சென் அனைத்து மாநில பார்கவுன்சில் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வழக்கறிஞர்கள் சட்டம் மற்றும் அகில இந்திய பார்கவுன்சில் விதிகளின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படாத மாநில பார்கவுன்சில்களின் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தொடங்க வேண்டும்.

பார்கவுன்சிலில் பதிவு செய்த மொத்த வழக்கறிஞர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் எத்தனை வழக்கறிஞர்கள் உள்ளனர், சரிபார்ப்பு நிலுவையில் உள்ள வழக்கறிஞர்களின் எண்ணிக்கை, வாக்களிக்க தகுதியான வழக்கறிஞர் உள்ளிட்ட விவரங்களை உடனடியாக அகில இந்திய பார்கவுன்சிலுக்கு அனுப்ப வேண்டும். வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட பூர்வாங்க நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டும்.

வழக்கறிஞர்கள் சட்டப்படி மாநில பார்கவுன்சில் நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு பெற முடியும். எனவே, பதவி காலம் முடிந்த மாநில பார்கவுன்சில்கள் அந்தந்த பார்கவுன்சில்களின் கள நிலவரங்களின் அடிப்படையில் விரைவில் தேர்தல் குறித்த அறிவிப்பை வௌியிட வேண்டும். இது தொடர்பான விரிவான அறிக்கையை ஆகஸ்ட் 10ம் ேததிக்குள் அகில இந்திய பார்கவுன்சிலுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related News