தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் ஆணையத்தை முன்னிறுத்தி தமிழ்நாடு மீது மறைமுக தாக்குதல்: வீடியோ வெளியிட்டு திமுக கடும் கண்டனம்

சென்னை: தேர்தல் ஆணையத்தை முன்னிறுத்தி தமிழ்நாடு மீது பாஜ மறைமுக தாக்குதல் நடத்துகிறது என்று திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக தலைமை கழகம் தனது சமூக வலைதள பதிவில் வெளியிட்டுள்ள பதிவில், ‘எஸ்ஐஆர் என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் அபாயச் சூழல் வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தை முன்னிறுத்தி தமிழ்நாடு மீது பாஜ மறைமுக தாக்குதல் நடத்துகிறது. நமது வாக்குரிமையைக் காக்க அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரமிது. எஸ்.ஐ.ஆர். படிவங்களைப பூர்த்தி செய்வதற்கு அனைத்து உதவிகளையும் செய்ய களத்தில் திமுக நிற்கிறது.

Advertisement

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கரம் கோர்த்து நின்று சதிகார சக்திகளின் சதிவலைகளை அறுத்திடுவோம்; ஜனநாயக உரிமையைக் காத்திடுவோம்’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும், எஸ்ஐஆர் மூலமாக வாக்காளர் பெயர் நீக்கப்படுவது தொடர்பான வீடியோ பதிவையும் திமுக வெளியிட்டுள்ளது. அதில், ‘எஸ்ஐஆர் உங்கள் குரலை ஒடுக்க பாஜவின் ஆயுதம். தமிழ்நாட்டோட 6.36 கோடி வாக்காளர்களும் இப்போ ஆபத்தில் இருக்கிறார்கள். இந்த சம்பவங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன மாதிரி விழிப்போடு இருந்து உங்கள் ஓட்டை பாதுகாக்க வேண்டிய நேரம் இது. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News