தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இறந்த வாக்காளர், ஊரில் இல்லாதவர்கள் பெயர்களை டிச.11க்குள் நீக்க வேண்டும்: பிஎல்ஓக்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

 

Advertisement

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்தில் முதல்வராக மம்தா பானர்ஜி பதவி வகிக்கிறார். அடுத்த ஆண்டு பேரவை தேர்தல் நடப்பதையொட்டி மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் வாக்குசாவடி நிலை அதிகாரிகளுக்கு(பிஎல்ஓ) அனுப்பியுள்ள அறிக்கையில், பிஎல்ஓக்கள் தரவுகளை பதிவேற்றும் போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தகுதியான வாக்காளரின் பெயரையும் தக்க வைத்து தகுதியற்ற வாக்காளரின் பெயர்களை நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எனவே, இறந்த மற்றும் உள்ளூரில் வசிக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பிஎல்ஓக்கள் டிச. 11ம் தேதிக்கு முன் படிவங்களை மீண்டும் சரி பார்த்து, இறந்த, இல்லாத வாக்காளர்களின் பெயரை நீக்க வேண்டும். யாராவது வேண்டுமென்றே தவறை செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement