தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தலில் விஜய்க்கு தோல்விதான்: அடித்து சொல்லும் அண்ணாமலை

புதுச்சேரி: தேர்தலில் விஜய்க்கு தோல்விதான் என்று அண்ணாமலை தெரிவித்து உள்ளார். புதுச்சேரியில் பாஜ வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநில பயிற்சி முகாம் தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பீகார் தேர்தல் வெற்றி என்பது இந்திய அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை மறுபடியும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

தவெக தலைவர் விஜய் பேசும் எதிர்ப்பு அரசியலை மட்டுமே வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்ல வேண்டும். கட்சி தொடங்கி விட்டோம் என்பதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை விஜய் எதிர்க்கிறார். பாஜவை எதிர்ப்பதே விஜய்யின் மனநிலையாக மாறிவிட்டது. எதிர்ப்பு அரசியல் செய்து ராகுல்காந்தி 95 தேர்தலில் தோற்றுள்ளார்.

இதே நிலைதான் விஜய்க்கும் ஏற்படும். புதிய கட்சி துவங்கிய பிரசாந்த் கிஷோர் பீகாரில் 3.5 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பெற்றார். ஆளுங்கட்சி நன்றாக இருக்கும்போது மக்களுக்கு ஒரு மாற்று தேவை இல்லை. பிறகு எப்படி வாக்களிப்பார்கள். கட்சி ஆரம்பித்து விட்டேன் என்பதற்காக எதிர்த்தால் சரியாக இருக்குமா? தவறே செய்யாதபோது தவறு, தவறு என்று ஏன் சும்மா சொல்கிறீர்கள்.? இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement