தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் தயார் நிலை குறித்து பீகாரில் வரும் 4, 5ம் தேதி தேர்தல் ஆணையம் ஆய்வு

பாட்னா: பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் தயார் நிலை குறித்து அக்டோபர் 4, 5ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய உள்ளது. பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பாஜ கூட்டணி ஆட்சி நடப்பாண்டு நவம்பர் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. 243 உறுப்பினர்களை கொண்ட பேரவைக்கு நடப்பாண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதையொட்டி பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வௌியிட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் இம்மாதம் 30ம் தேதி வௌியிடப்பட உள்ளது.

Advertisement

இந்நிலையில் பீகார் தேர்தலுக்காக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பொது, காவல்துறை மற்றும் செலவு பார்வையாளர்களின் விளக்க கூட்டம் அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து தேர்தல் தயார் நிலை குறித்து அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஆய்வு நடைபெற உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய குழுவினர் வரும் 4ம் தேதி பீகார் தலைநகர் பாட்னா செல்ல உள்ளனர். இந்த ஆய்வின்போது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதனால் பீகார் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

Advertisement

Related News