தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் , நயினார் நாகேந்திரன், விஜய பிரபாகரன் வழக்கு !!

Advertisement

சென்னை: மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட மூவர் வழக்கு தொடர்ந்துள்ளனர். 18வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது. இதில், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஓ.பன்னீர் செல்வம், திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஐ.யு.எம்.எல் வேட்பாளர் நவாஸ் கனியிடம் தோல்வி அடைந்தார்.இந்த நிலையில், நவாஸ்கனி, சொத்துமதிப்பை முறையாக காட்டவில்லை என்பதால், அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி, ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்., ''பிரிந்து கிடக்கும் அதிமுக இணைய வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதிமுகவை இணைத்துக் கொள்ளுங்கள் என்று நாங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கவில்லை.சசிகலா பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் '' என்றார். இதே போல், விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்து தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனும் மனுத்தாக்கல் செய்துள்ளார். திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் ராபர்ட் புரூஸை எதிர்த்து நயினார் நாகேந்திரனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

Advertisement