தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் நேர்மையா நடக்கும் என்பது ‘டவுட்’; மோடி சிறந்த நாடக நடிகர்.! முத்தரசன் ‘கலாய்’

திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை.வைகோவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் துவாக்குடி பஸ் நிலையம் அருகில் நேற்று காலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:  மோடி சிறந்த நாடக நடிகர். சாமானிய மக்கள் வாங்கும் கடன், விவசாய கடன், கல்விக்கடன் சிறு, குறு தொழில்களுக்கு வாங்கும் கடன் ஆகியவற்றை கட்டாய வசூல் செய்ய தீவிரம் காட்டுகிறார். ஆனால் பல லட்சம் கோடி கடன்களை வாங்கிக்கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பிசெல்லும் தொழிலதிபரிடம் இருந்து கடனை வசூலிக்காமல் தள்ளுபடி செய்கிறார்.
Advertisement

நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் அவரது குடும்பம் என்று பீற்றிக்கொள்கிறார். ஆனால் சொந்த மனைவியை காப்பாற்றாத நபர் எப்படி நாட்டு மக்களை காப்பாற்ற முடியும். இப்போது நடைபெறும் தேர்தல் சுதந்திரமாக நடத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் கட்சியினருக்கு பாரபட்சமாக சின்னங்களை ஒதுக்கினார்கள். இதனை யாரும் மறுக்க முடியாது. பாஜ கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு கேட்ட சின்னங்களை உடனே ஒதுக்கி கொடுக்கிறார்கள். அதே வேளையில் எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் முறையாக ஒதுக்கப்படவில்லை. வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. ஆகவே பாசிச கொள்கை கொண்ட பாஜவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Related News