தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தலில் மக்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி அமையும்: பிரேமலதா நம்பிக்கை

மதுரை: சட்டமன்ற தேர்தலில் மக்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி அமையுமென பிரேமலதா தெரிவித்தார். மதுரை, தெப்பக்குளத்தில் தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் உள்ள பெரிய கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் தேமுதிக உடன் கூட்டணி வைக்க ஆர்வமாக உள்ளன. மக்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி நிச்சயம் அமையும். இந்த முறை மிக பொறுமையாக, தெளிவாக சரியான நேரத்தில், சரியான முடிவை எடுப்போம். கூட்டணி மந்திரி சபையில் நாங்கள் இருப்போம். யாருடனும் கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கூட்டணிகள் மாறலாம். அது பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு தெரியவரும். 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. அப்படியொரு சூழல் வந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட கட்சிகள் உடன்படுவார்கள். எல்லா கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சிகள் தான்’’ என்றார்.

Advertisement

* அதிமுக மாஜி அமைச்சர் ஒரு மணிநேரம் வெயிட்டிங்

பிரேமலதாவை சந்திக்க அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் வந்தார். ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மண்டபத்திலுள்ள தனி அறையில் காத்திருந்தார். கூட்டம் முடிந்ததும் தொண்டர்களுடன் பிரேமலதா புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடந்ததால், அப்போது அறையை விட்டு எழுந்து வந்த உதயகுமார், மேடையில் வைத்தே பிரேமலதாவை சந்தித்தார். பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். சந்திப்புக்கு பின் உதயகுமார் அளித்த பேட்டியில், ‘‘பிரேமலதாவின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க வந்தேன். கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தான் அறிவிப்பார்’’ என்றார்.

Advertisement