தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் திருட்டு குறித்த எஸ்எம்எஸ் அனுப்ப தடை காங். குற்றச்சாட்டை டிராய் நிராகரிப்பு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் 2024ம் ஆண்டு தேர்தல் எவ்வாறு ‘திருடப்பட்டது’ என்பது குறித்த ஆவணப்படத்தின் இணைப்பைத் தனது கட்சித் தொண்டர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப காங்கிரஸ் கட்சி, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (டிராய்) விண்ணப்பித்திருந்தது. ஆனால், இது போராட்டத்தை தூண்டும் விதமாக இருப்பதாக கூறி, எஸ்எம்எஸ்களை அனுப்ப அனுமதி மறுத்துவிட்டது.

Advertisement

டிராயின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், டிராய் அமைப்பு பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு போலச் செயல்படுவதாகவும், எஸ்எம்எஸ் அனுப்புவதற்கான விண்ணப்பத்தை டிராய் நிராகரித்ததாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை டிராய் நிராகரித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பெயரை குறிப்பிடாமல் டிராய் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘2024ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் எவ்வாறு திருடப்பட்டது என்பது குறித்து ஒரு அரசியல் கட்சியின் மகாராஷ்டிரா கேடருக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதற்கான எந்த விண்ணப்பத்தையும் டிராய் பெறவில்லை. அந்த விண்ணப்பம் சேவை வழங்குநர்களில் ஒருவரான எஸ்டிபிஎல்-க்கு சமர்ப்பிக்கப்பட்டது. அவர் அதனை நிராகரித்தார். இந்த செயல்பாட்டில் டிராய் எந்த நிலையிலும் ஈடுபடவில்லை” என்று தெரிவித்துள்ளது.

Advertisement

Related News