தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நாடாளுமன்றத்திற்கே உச்சபட்ச அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு கிடையாது: சபாநாயகர் அப்பாவு பேட்டி

நெல்லை: நெல்லையில் சபாநாயகர் அப்பாவு இன்று அளித்த பேட்டி: அண்ணா காலத்தில் இருந்தே இருமொழி கொள்கை தான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. மும்மொழி கொள்கைக்கு இங்கு இடமில்லை. பிளஸ் 1 பொதுத்தேர்வு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்றபடி காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும். இதனால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையின்படி 3, 5, 8ம் வகுப்பு தேர்வுகளில் வெற்றி பெற்றால் தான் மேல்படிப்புக்கு செல்ல முடியும். இல்லையென்றால் அவர்கள் சொந்த தொழிலுக்கு தான் செல்ல முடியும். ஆனால் மாநில அரசின் கல்வி கொள்கை சாமானிய மக்களும் கல்வி கற்கக்கூடிய நிலையில் உள்ளது.

ஒன்றிய அரசின் ஐஐடி போன்ற தேர்வுகளில் உயர் சாதியினர் குருகுல கல்வியை பயின்றால் உயர்கல்விக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. அவர்களுக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ரூ.14 ஆயிரம் கோடி வரை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாமர மக்கள் தான் மிகவும் கஷ்டப்படுகின்றனர். நாடாளுமன்றத்திற்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. தேர்தல் கமிஷனுக்கு கிடையாது. ஒரு குற்றச்சாட்டை ஒருவர் சொல்லும் போது அது உண்மையா, பொய்யா என்பதை நிரூபிக்காமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்வது தவறு. தேர்தல் கமிஷன் இதுபோன்ற தவறுகளுக்கு உடந்தையாக இருப்பது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.