தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் ஆணையம் எப்போதும் மோடி அரசின் கைப்பாவை: கபில் சிபல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேர்தல் ஆணையம் எப்போதுமே மோடி அரசின் கைப்பாவையாக இருந்து வருவதாக மாநிலங்களவை எம்பி கபில் சிபல் குற்றம்சாட்டி உள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மோடி அரசு ஆட்சிக்கு வந்தததில் இருந்து தேர்தல் ஆணையம் அரசின் கைப்பாவையாகவே எப்போதும் இருந்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் நடத்தையை பற்றி அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது என நினைக்கிறேன்.
Advertisement

ஏனெனில், ஒவ்வொரு தேர்தல் ஆணையரும் ஒன்றிய அரசுடன் நெருக்கமடைவதில் முந்தையவர்களை விட அதிகமாக இருக்கின்றனர். தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. அந்த ஆணையம் எதிர்பார்க்கப்பட்ட சுதந்திரத்தை பிரதிபலிக்கவில்லை. பீகாரில் நடந்து வரும் தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை முற்றிலும் அரசியலமைப்புக்கு விரோதமானது.

குடியுரிமை தொடர்பான பிரச்னைகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை, அதுவும் பூத் நிலை அதிகாரிகளை கொண்டு செய்கிறார்கள். எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற பாஜ அனைத்து வழிகளையும் பயன்படுத்துவதாக நான் சொல்லி வருகிறேன். அதன்படி, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் என்பது பெரும்பான்மை அரசுகளை உறுதி செய்வதற்கான செயல்முறையாகும்.

ஏனெனில் ஏழைகள், ஓரங்கட்டப்பட்டவர்கள், ஆதிவாசிகளின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கினால் பெரும்பான்மை கட்சி எப்போதும் வெற்றி பெறுவதை உறுதி செய்யலாம். இது மிகவும் கவலைக்குரியது. வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வேறு எந்தப் பிரச்னையையும் விடவும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பிரச்னை மிகவும் முக்கியமாக பேசப்பட வேண்டும்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ வென்ற தொகுதிகளில் மட்டும் திடீரென்று வாக்காளர்கள் எப்படி அதிகரித்தார்கள் என்பதை தேர்தல் ஆணையத்தால் இன்னும் விளக்க முடியவில்லை. அதைப் பற்றியும் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.

Advertisement

Related News