தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் ஆணையம் புகார் இவிஎம் ஹேக் செய்ய முடியும் என்றவர் மீது வழக்கு பதிவு: மும்பை போலீஸ் அதிரடி

Advertisement

புதுடெல்லி: மகாராஷ்டிரா தேர்தலில் பயன்படுத்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தன்னால் ஹேக் செய்ய முடியும் என வீடியோ வெளியிட்ட நபருக்கு எதிராக தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மின்னணு வாக்கு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா மாநில தேர்தலில் வாக்கு இயந்திரத்திலும், வாக்கு எண்ணிக்கையிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

இதற்கிடையே, மகாராஷ்டிரா தேர்தலில் பயன்படுத்திய மின்னணு வாக்கு இயந்திரங்களில் அதிர்வெண்ணை பிரித்து அதை தன்னால் ஹேக் செய்ய முடியும் என சையது ஷுஜா என்பவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. சையது தன்னை சைபர் நிபுணர் என கூறிக் கொண்டுள்ளார். இது குறித்து மகாராஷ்டிரா தலைமை தேர்தல் அதிகாரி மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், சையது ஷுஜா மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), ஐடி சட்டத்தின் கீழ் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சையது கூறியவை தவறான கருத்துக்கள் என்றும் அடிப்படை ஆதாரமற்றது என்றும் கூறியிருக்கும் மகாராஷ்டிரா தலைமை தேர்தல் அதிகாரி, இதுபோன்ற செயல்கள் கடுமையான குற்றம் என்றும், இதில் சம்மந்தப்பட்ட யாரும் தப்பிக்க மாட்டார்கள் என்றும் எச்சரித்துள்ளார். ஏற்கனவே, 2019ல் இதே போன்ற வீடியோ ஒன்றை சையது ஷுஜா வெளியிட்டதற்காக அவர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது சையது ஷுஜா வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Related News