தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் பத்திர ஊழல் குறித்து எஸ்ஐடி விசாரிக்க கோரிய மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரரைண: வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தகவல்

Advertisement

கொல்கத்தா: தேர்தல் பத்திர ஊழல் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரைணக்கு வர உள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என கடந்த பிப்ரவரி 15ம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், ‘‘நாடு முழுவதும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகிய அமைப்புகளின் தரப்பில் விசாரணைக்காக சிக்கிய பல்வேறு நிறுவனங்கள் தான் தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக நிதி அளித்துள்ளன. எனவே இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்புக்கு மாற்றி அமைத்து விரிவாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த பொதுநல மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என வழக்கறி!ர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். கொல்கத்தா பிரஸ் கிளப்பில் நேற்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரசாந்த் பூஷன், “தேர்தல் பத்திர திட்டம் இந்திய ஜனநாயக வரலாற்றின் மிகப்பெரிய ஊழல். இதுகுறித்து உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில் சுதந்திரமான, நடுநிலையான சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். தேர்தல் பத்திர ஊழலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறையை சிறப்பு புலனாய்வு குழுவில் சேர்க்க கூடாது” என்று கூறினார்.

Advertisement