தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2026 தேர்தலுக்கு பிறகு பாஜ காணாமல் போகும்: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி: எஸ்ஐஆர் குறித்து வரும் 2ம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வர் முடிவு செய்துள்ளார். அதில் அனைத்து கட்சிகளின் கருத்துக்களும் பதிவு செய்யப்படும். அதன் பிறகு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். சிறுபான்மையினர், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை ஒட்டு மொத்தமாக வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க தேர்தல் ஆணையத்தின் மூலமாக ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது. இதை எந்த காலத்திலும் திமுக ஏற்காது. பீகாரிலும் இது போன்று நடந்துள்ளது.

Advertisement

இலங்கை தமிழர்களுக்கு நாம் வீடு, ரேஷன் பொருட்கள் அனைத்தும் கொடுத்து வருகிறோம். ஆனால் அவர்களுக்கு இங்கு குடியுரிமை கிடையாது. ஒரு வாக்காளர் இந்திய குடிமகனா, இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது

இந்திய குடியுரிமை சட்டம் 1955. ஆனால் இந்திய குடிமகனா, இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது ஒட்டுமொத்தமாக நமது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நேர்மையானவர்கள். அவர்களுக்கு சில கட்டளைகள் வரும்பொழுது அவற்றை பின்பற்றக்கூடிய சூழ்நிலை வருகிறது. எப்படிப்பட்ட ஆணைகளை தேர்தல் ஆணையம் சொல்லும் என்பது தெரியாது. தேர்தல் ஆணையம் தவறான விஷயங்களை சொல்லிவிட்டால் அதிலிருந்து பாதிக்கப்படுபவர்களை காப்பாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் வெளி மாநிலங்களில் இருந்து வந்து வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்திலிருந்து கோடிக்கணக்கில் வந்துள்ளது. அதனால் தமிழ்நாட்டை பற்றி தெரியாதவர்களை, ஒரே இடத்தில் நிரந்தரமாக இல்லாதவர்களை எல்லாம் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்பதுதான் எங்களது கருத்து. 2026 தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டில் பாஜ காணாமல் போகும். மீண்டும் திமுகவின் 2.0 தொடரும். விஜய் வெறுப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பொதுமக்கள் மத்தியில் திமுக மீது எந்த ஒரு வெறுப்பும் இல்லை. விவசாயிகளுக்கு இழப்பீடு ஏற்படும் போது அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.தலைவர் பதவியை தக்க வைப்பதற்காக நயினார் நாகேந்திரன் எதையோ பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News