தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க தலைமை நிர்வாகக்குழுவிற்கு அதிகாரம்: சென்னையில் நடந்த மஜக செயற்குழுவில் தீர்மானம்

சென்னை: மனிதநேய ஜனநாயக கட்சியின்(மஜக) செயற்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மஜக அவைத்தலைவர் சம்சுதீன் நாசிர் உமரி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொருளாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

கூட்டத்தில், தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை ஏற்று அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். திருப்பரங்குன்ற விவகாரத்தில் தமிழக அரசுக்கு பாராட்டு. கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி வழங்காத ஒன்றிய அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.

கொள்முதல் நெல்லின் ஈரப்பதத்தை உடனடியாக உயர்த்தி ஒன்றிய அரசு ஆணை வழங்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நேரத்தில் கூட்டணி கணக்குகள் இன்னும் முடியாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இந்நிலையில் தமிழக மக்களின் நலன் சார்ந்து அரசியல் தட்ப, வெட்ப நிலையை ஆய்வு செய்து மனிதநேய ஜனநாயக கட்சி எந்தக் கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்ற முடிவை எடுக்க தலைமை நிர்வாகக் குழுவிற்கு முழு அதிகாரத்தை இச்செயற்குழு வழங்குகிறது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement