தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய திருட்டை கண்டுபிடித்துள்ளோம், விரைவில் ஆதாரத்துடன் வெளியிடுவோம்: ராகுல்காந்தி

டெல்லி: தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய திருட்டை கண்டுபிடித்துள்ளோம், விரைவில் ஆதாரத்துடன் வெளியிடுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான புகார் தெரிவித்துள்ளார். அதில்,

*இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் இவர்கள் மோசடி செய்தார்கள்.

*நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலும், வீடியோவும் கேட்டோம். ஆனால் எங்களுக்குத் தரவே இல்லை.

*அதற்காக அரசு விதியையே மாற்றி, வீடியோக்களைக் கொடுக்காமல் பார்த்துக்கொண்டது.

*மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன், 1 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டார்கள்.

*கர்நாடகாவிலும் நாங்கள் ஆழமான ஆய்வு செய்தோம் மிகப்பெரிய மோசடி அங்கே வெளிச்சத்திற்கு வந்தது.

*நான் உங்களுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் காட்டத் தயார் — என்ன வஞ்சனை நடந்தது என்பதையும், எங்கே நடந்தது என்பதையும் முழுமையாக, ஆதாரங்களுடன் காட்ட முடியும்.

பாஜகவின் நாடகத்தை நாங்கள் புரிந்துகொண்டுவிட்டோம்.

*கர்நாடகாவில் ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து, 6 மாதமாக முழுமையாக ஆய்வு செய்தோம். அதிலேயே இவர்கள் எப்படி தேர்தலை திருடுகிறார்கள் என்ற முழு விபரங்களையும் பிடித்தோம்.

*புதிய வாக்காளர்கள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்?யார் உண்மையில் வாக்கு செலுத்துகிறார்கள்?

எங்கிருந்து அந்த வாக்குகள் போட்டுக்கப்படுகின்றன?

*இப்போது அவர்களுடைய முழு திருட்டுத்தனமும் எங்களுக்குத் தெரிந்துவிட்டது. அவர் அதையும் உணர்ந்துவிட்டார்கள்.

*அதனால்தான் இப்போது பீகாரில் அந்த முறையையே மாற்றி. ஆனால் ஒரு புதிய வடிவில் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்.

*தற்போது அவர்கள் வாக்காளர்களையே நீக்கிவிட்டு, தங்களுக்கேற்ற முறையில் புதிய வாக்காளர் பட்டியலை உருவாக்கப்போகிறார்கள்.

*பீகாரில் 52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினால் பதில் இல்லை.

*இந்தியாவில் தேர்தல்கள் திருடப்படுகின்றன. இதுதான் நம் ஜனநாயகத்தின் கடுமையான உண்மை. என குற்றம்சாட்டி இருந்தார்.

Related News