தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதியவரிடம் இருந்து கோரிக்கை மனுவை வாங்க மறுத்த ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி: திருச்சூர் அருகே நடந்த கூட்டத்தில் பரபரப்பு

திருவனந்தபுரம்: திருச்சூர் அருகே நடந்த ஒரு கூட்டத்தில் வீடு கட்ட உதவ கோரி ஒரு முதியவர் கொடுத்த மனுவை ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வாங்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள நாட்டிகா என்ற பகுதியில் நட்பு சபை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தை பிரபல மலையாள சினிமா இயக்குனர் சத்யன் அந்திக்காடு தொடங்கி வைத்தார். கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது கொச்சு வேலாயுதன் என்ற முதியவர் ஒரு கோரிக்கை மனுவுடன் அங்கு வந்தார்.

Advertisement

சுரேஷ் கோபியை சந்தித்த அவர், தென்னை மரம் விழுந்து தன்னுடைய வீடு சேதமடைந்து விட்டதாகவும், அதை சீரமைக்க உதவ வேண்டும் என்றும் கூறி மனுவை கொடுத்தார். ஆனால் மனுவை வாங்க மறுத்த சுரேஷ் கோபி, வீடு கட்டிக் கொடுப்பது தன்னுடைய வேலையல்ல என்றும், மாநில அரசு தான் அந்த வேலையை செய்ய வேண்டும் என்றும் கூறி முதியவரை திருப்பி அனுப்பி வைத்தார். இது அந்த முதியவருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. இதற்கிடையே கொச்சு வேலாயுதனுக்கு வீடு கட்டிக் கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது. திருச்சூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளரான அப்துல் வகாப், கொச்சு வேலாயுதனின் வீட்டுக்கு சென்று கட்சியின் சார்பில் வீடு கட்டித் தருவதாக உறுதியளித்தார்.

இந்த விவகாரம் குறித்து சுரேஷ் கோபி கூறியது: வீடு கட்டிக் கொடுப்பது மாநில அரசின் வேலையாகும். தனி ஒரு ஆளாக அதை செய்ய முடியாது என்றார்.

Advertisement