தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேற்குவங்க விழாவில் மாயமான நிலையில் வங்கதேசத்தில் உயிருடன் சிக்கிய மூதாட்டி: 20 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் உருக்கம்

போபால்: மேற்கு வங்கத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூதாட்டி, தற்போது வங்காளதேசத்தில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா என்ற பெண், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற கங்காசாகர் மேளா திருவிழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார். அப்போது அங்கு ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் வழிதவறிய அவர், தவறுதலாக வங்கதேசம் செல்லும் படகில் ஏறியதால் எல்லை தாண்டிச் சென்றுவிட்டார். அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவர் இறந்துவிட்டதாகவே குடும்பத்தினர் கருதி வந்தனர்.

Advertisement

இந்நிலையில் வங்கதேசத்தில் ஆதரவின்றித் தவித்த அவரை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ‘ஹாம்’ வானொலி அமைப்பினர் தற்போது கண்டுபிடித்துள்ளனர். வங்கதேசத்தின் சாபாய் நவாப்கஞ்ச் பகுதியில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த அந்த மூதாட்டி, அடிக்கடி ‘சாகர்’ என்ற பெயரை மட்டும் கூறி வந்துள்ளார். இதுகுறித்துத் தகவல் அறிந்த மேற்கு வங்க வானொலி மன்றத்தினர், அங்கு சென்று விசாரித்ததில் அவர் காணாமல் போன இந்தியப் பெண் என்பது உறுதியானது. இதையடுத்து டெல்லியில் வசிக்கும் அவரது மகன்களான ராஜேஷ் மற்றும் கணேஷ் ஆகியோரைத் தொடர்பு கொண்டு காணொளி வாயிலாகப் பேச வைத்தனர்.

திரையில் தனது தாயைக் கண்டதும் மகன்கள் அடையாளம் கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து வானொலி மன்றத்தினர் கூறும்போது, ‘தாயும் மகன்களும் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்துக்கொண்டது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் மூதாட்டியை விரைவில் இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்று தெரிவித்தனர்.

Advertisement

Related News