தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எளாவூர் சோதனைச்சாவடியில் ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த 590 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கும்பல் கைது

சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை அன்று உளவுத்துறை டிஜிபிக்கு ஆந்திராவிலிருந்து சுமார் 1,000 கிலோ கஞ்சாவை கடத்தி சென்னைக்கு கொண்டுவர உள்ளதாக ரகசிய தகவல் வந்துள்ளது. இதை தொடர்ந்து 3 நாட்களாக எளாவூர் சோதனைச்சாவடி, தடா, சூலூர்பேட்டை, நெல்லூர் ஆகிய இடங்களில் மத்திய போதைப்பொருள் தடுப்பு இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் சாமி தலைமையிலான தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் நோட்டமிட்டு வாகன சோதனை மேற்கொண்டனர்.

Advertisement

நேற்று தடா பகுதியில் உள்ள தாபா ஒன்றில் சந்தேகப்படும்படி மினி லாரி மற்றும் சொகுசு காரில் ஒரு கும்பல் வந்துள்ளது. எளாவூர் சோதனைச்சாவடியில் கார், மினி லாரியை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அதில், விளையாட்டு உபகரணங்கள் இருந்துள்ளன. அந்த பொருட்களை போலீசார் சோதனை செய்தபோது ரூ.3 கோடி மதிப்பிலான 590 கிலோ எடைகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டி (27), ஷேக் அப்துல்லா (30), ராமநாதன் (35), தஞ்சாவூரைச் சேர்ந்த வினோத் (32), கோயம்புத்தூரைச் சேர்ந்தவ பாரதி (33), மணிகண்டன் (34) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் 6 பேரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News