தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எளாவூர் சாலையோர வியாபாரிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் சாலையோர வியாபாரிகள் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், கலெக்டரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரை சுற்றியுள்ள சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். இவர்கள் இதே பகுதியில் அமைந்துள்ள சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை ஓரம் சிறு கொட்டகைகள் அமைத்து தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறி, கிழங்கு மற்றும் கீரை வகை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
Advertisement

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நெடுஞ்சாலை துறையினர் சாலையோர கொட்டகைகளை அமைக்க மறுப்பு தெரிவித்து வருவதால் தங்களின் விலை பொருட்களை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் விலைப் பொருட்கள் அழகி வீணாகிறது. இதனால் எளாவூர் ரயில் நிலையம் அருகாமையில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு கடைகள் கட்டி சாலையோர வியாபாரிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்காதால் கடந்த 10ம் தேதி சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் நேற்று திடீரென வியாபாரிகள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் இல்லாததால் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் ஜமாபந்திக்கு வரும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Advertisement

Related News