தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு வீரர்களுக்கு உடல்தகுதி தேர்வு: 30ம் தேதி வரை நடக்கிறது

சென்னை: இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வாரியாக உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
Advertisement

அதன்படி சென்னை மாவட்டத்திற்கான இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான உடல் தகுதி தேர்வு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து நேற்று முன்தினம் இரவு முதலே எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மைதானம் முன்பு குவிந்தனர்.

பின்னர் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய உடல் தகுதி தேர்வில் ஆண்களுக்கு 1500 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம் நடந்தது. பிறகு 5.0 மீட்டர் உயர கயிறு ஏறுதல், 3.80 மீட்டர் நீளம் தாண்டுதல், 1.20 மீட்டர் உயரம் தாண்டுதல் போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இறுதியாக அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் நடைபெறும்.

இந்த உடல் தகுதி போட்டி வரும் 30ம் ேததி வரை, அதாவது 4 நாட்கள் நடக்கிறது. உடல்தகுதி போட்டியில் 656 ஆண்கள் மற்றும் 509 பெண்கள் கலந்துகொள்கின்றனர்.

Advertisement

Related News