தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எழும்பூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை 4 நாட்களில் முடிக்க திட்டம்: நெடுஞ்சாலைத்துறை தகவல்

சென்னை: எழும்பூர் பகுதியில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள் 4 நாட்களில் முழுமையாக முடிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் ரவிச்சந்தரன் தெரிவித்துள்ளார். சென்னையில் மழைக்காலங்களில் வெள்ளம் தேங்குவதை தடுப்பதற்காக வெள்ளத் தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. அதன்படி, ரயில் நிலைய பாலங்களையொட்டிய பகுதிகளில் ரயில்வே பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பிரச்னைகளால் மழைநீர் வடிகால் பணிகளை முடிப்பதில் சவால்கள் இருந்தது. ரயில்வே தண்டவாளங்களின் குறுக்கே மழைநீர் செல்லும் வகையில் வடிகால் அமைக்கும் பணிகளுக்கான திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டு தண்டவாளத்துக்கு கீழே மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வது எப்படி என்கிற ஆய்வுகள் நடத்தப்பட்டு பணிகள் நடந்தது.
Advertisement

அதன்படி, எழும்பூர் மற்றும் கணேசபுரம் ஆகிய பகுதிகளில் தண்டவாளத்தின் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு மழைநீரை கெண்டு செல்வதற்கான வடிகால் பணிகள் தொடங்கி நடந்தன. இந்நிலையில் எழும்பூர் அரசு நுண்கலை கல்லூரின் பின்புறம் நடந்து வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தலின்படி நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.

அப்போது, முக்கியமான மழைநீர் இணைப்பானது ரயில்வேயால் சமீபத்தில் முடிக்கப்பட்டது. இறுதிக்கட்ட பணிகள் இன்னும் 4 நாட்களில் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News