எழும்பூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை 4 நாட்களில் முடிக்க திட்டம்: நெடுஞ்சாலைத்துறை தகவல்
Advertisement
அதன்படி, எழும்பூர் மற்றும் கணேசபுரம் ஆகிய பகுதிகளில் தண்டவாளத்தின் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு மழைநீரை கெண்டு செல்வதற்கான வடிகால் பணிகள் தொடங்கி நடந்தன. இந்நிலையில் எழும்பூர் அரசு நுண்கலை கல்லூரின் பின்புறம் நடந்து வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தலின்படி நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.
அப்போது, முக்கியமான மழைநீர் இணைப்பானது ரயில்வேயால் சமீபத்தில் முடிக்கப்பட்டது. இறுதிக்கட்ட பணிகள் இன்னும் 4 நாட்களில் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Advertisement