தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க முயற்சி எகிப்தில் காசா அமைதி ஒப்பந்த மாநாடு: ஒன்றிய அமைச்சர் கே.வி.சிங் பங்கேற்பு

 

Advertisement

புதுடெல்லி: எகிப்து நாட்டின் செங்கடல் நகரமான ஷர்ம் எல்-ஷேக் நகரில் இன்று காசா அமைதி ஒப்பந்த உச்சி மாநாடு நடைபெற உள்ளது. எகிப்து அதிபர் அப்தல் ஃபத்தா அல்-சிசி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தலைமையில் மாநாடு நடைபெறுகிறது. இந்த காசா அமைதி ஒப்பந்த மாநாட்டில் ஐநா பொதுசெயலாளர் அன்டோனியோ குட்டரஸ், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதேபோல் இந்திய பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடப்பட்டது.

ஆனால் காசா அமைதி ஒப்பந்த மாநாட்டில் ஒன்றிய இணைஅமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பங்கேற்பார் என அறிவிப்பு வௌியாகி உள்ளது. இந்த மாநாடு, காசா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு வருவதையும், மத்திய கிழக்கு நாடுகளில் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை மீட்டெடுப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. தற்போது இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டு, பாலஸ்தீனர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பி வர தொடங்கி உள்ள நிலையில், இந்த மாநாடு நடைபெற இருக்கிறது.

 

Advertisement

Related News