தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநில பொதுச்செயலாளர் உள்பட எடப்பாடி பிரசார வாகனத்தில் பாஜ பிரமுகர்கள் புறக்கணிப்பு: மதுரையில் சலசலப்பு

மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4ம் கட்டமாக நேற்று முதல் செப். 4ம் தேதி வரை மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதற்காக விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார்.  மாலை 5.50 மணிக்கு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே பேசினார். தொடர்ந்து திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார பஸ்சின் மீது நின்றவாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Advertisement

இதுவரை நடந்த கூட்டங்களில் அந்தந்த ஊர்களில் முக்கிய கூட்டணி கட்சியினரை தன்னுடன் நிற்க வைத்து பேசுவதை வழக்கமாக ெகாண்டிருந்த எடப்பாடி, நேற்று திருப்பரங்குன்றத்தில் நடந்த கூட்டத்தில், அதிமுக மாவட்டச செயலாளரான ராஜன்செல்லப்பாவை மட்டும் நிற்க வைத்திருந்தார். பாஜவைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் பலர் மதுரையில் இருந்தும் அவர்கள் யாரையும் பிரசார வாகனத்தில் ஏற்றவில்லை.

குறிப்பாக பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.னிவாசன், மாவட்ட தலைவர் சிவலிங்கம் ஆகியோர் பிரசார வாகனத்தில் ஏறமுயன்றனர். ஆனால், அதிமுக ஐடி விங்க் நிர்வாகி ராஜ்சத்யன், மேலே இடமில்லை எனக்கூறி, அவர்களை ஏறவிடாமல் தடுத்தார்.  இதனால், அதிர்ச்சியடைந்த பாஜவினர் அங்கு சிறிது நேரம் நின்றிருந்தனர். ஆனால், பிரசார வேனுக்கு தாங்கள் அழைக்கப்படாததால் கடும் அதிருப்தியடைந்து, எடப்பாடி பேசி முடிப்பதற்குள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

Advertisement

Related News