தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எடப்பாடி பழனிசாமி கொடுத்த அல்வாவால்தான் அதிமுக பல கோணங்களில் பயணித்து கொண்டிருக்கிறது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: பெரம்பூர் நெடுஞ்சாலை ராஜிவ் காந்தி பூங்கா அருகில் ரூ.34.90 லட்சம் மதிப்பில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று காலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மத்திய வாட்டார துணை ஆணையர் கவுஷிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Advertisement

எடப்பாடி பழனிசாமி கொடுத்த அல்வாவால்தான் அந்த இயக்கம் பல கோணங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அவர் அல்வா கொடுத்தார் என்பதை உணர்ந்துதான் செங்கோட்டையன் போன்றவர்கள் பிரிந்து நின்று எதிர் கருத்துகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அல்வாவும் ஒரு வகை உணவுதான், தேவைப்படும் இடத்தில் அதையும் முதலமைச்சர் பரிமாறுவார்.  ஆணவ கொலைக்கு எதிராக ஆணையம் அமைத்துள்ளது வெற்று அறிக்கை என்ற வானதி சீனிவாசனின் விமர்சனம் செய்கிறார். 2026ம் ஆண்டு தமிழக முதல்வர் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகிறார் என்பதால் வானதி சீனிவாசனுக்கு அலர்ஜி ஏற்படுகிறது.

ஆணவக் கொலைகளுக்கு என தனியாக ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் கூறியிருக்கிறார். அந்த ஆணையத்தின் இறுதி அறிக்கையைத்தான் செயல்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். எந்த திட்டமாக இருந்தாலும் அதை திட்டமிட்டு நிறைவேற்றுகிறவர் தமிழக முதல்வர். தெருக்களின் பெயரில் இருக்கிற சாதிய அடையாளங்களை மாற்றுவது தொடர்பான வழக்கு வந்தபோது நீதிமன்றமே முதல்வரின் முயற்சியைப் பாராட்டி இருக்கிறது. பலதரப்பட்ட மக்களின் பாராட்டை பெரும் முதல்வர் வானதி சீனிவாசனின் பாராட்டை பற்றி கவலைப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News