தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை ரேஸ்கோர்ஸில் இன்று காலை நடைபயிற்சி; ‘யாராச்சும் வந்து பேசுங்க... எடப்பாடி வந்து இருக்காரு...’ கூவி அழைத்த அதிமுக நிர்வாகிகள்

Advertisement

கோவை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று பிரசார பயணம் துவக்கினார். இரவில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். இன்று அதிகாலை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்கிங் சென்றார். அப்போது அவர் அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களை சந்தித்து பேச முயன்றார். ஆனால், அவரிடம் யாரும் பேச முன்வரவில்லை. இதனை பார்த்த அதிமுக நிர்வாகிகள், ‘‘எடப்பாடி பழனிச்சாமி வந்து இருக்கிறார். அவரிடம் பேசுங்கள்’’ என அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களை கூவி கூவி அழைத்தனர். அப்போதும் யாரும் வரவில்லை. எடப்பாடி பழனிசாமியை சுற்றி கேமராக்களும், அதிமுகவினரும் சூழ்ந்து இருந்தனர். அவர்களை மீறி அவரிடம் யாரும் செல்ல முடியவில்லை.

நடைபயிற்சி சென்று கொண்டிருந்த பலர் ஏதோ பட ஷூட்டிங் நடக்கிறது என தங்களுக்குள் பேசிக்கொண்டு சென்றனர். எடப்பாடி பழனிசாமியை அவர்களால் பார்க்க முடியவில்லை. மேலும், ஓட்டலில் இருந்து சுமார் 300 மீட்டர் வரை மட்டுமே அவர் நடைபயிற்சி செய்தார். டீக்கடைக்கு சென்று அங்கு மக்களை பார்க்கலாம் என நினைத்தபோது, அங்கேயும் யாரும் இல்லை. டீ மட்டும் குடித்துவிட்டு திரும்பினார். யாரும் கிடைக்காததால், அப்பகுதியில் எலுமிச்சை பழம் விற்றுக்கொண்டிருந்த வியாபாரி ஒருவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு எலுமிச்சை பழங்களை வாங்கிவிட்டு மீண்டும் ஓட்டலுக்கு திரும்பினார்.

Advertisement

Related News