தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியவர்கள் மீது தாக்குதல்: நெல்லையில் பரபரப்பு

 

நெல்லை: இபிஎஸ்க்கு எதிராக கருப்புக் கொடி காட்டியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சி சுற்றுப்பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நெல்லை சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி பல்வேறு இடங்களில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உடன் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நெல்லை சந்திப்பு பகுதிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து கருப்புக்கொடி காட்ட முயன்றவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பியவர்கள், அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேவர் சிலை முன் பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பவானி வேல்முருகன் தலைமையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது. நெல்லையில் கருப்பு கொடி காட்டியவர்களை அதிமுக ஆதரவு அமைப்பினர் கல் வீசிய தாக்கினர். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி கண்டனம் முழக்கங்கள் எழுப்பினர்.

கண்டன முழக்கங்கள் எழுப்பியவர்களுக்கும் அதிமுக ஆதரவு அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக ஆதரவு அமைப்பையும் கருப்புக் கொடி காட்டியவர்களையும் போலீசார் தடுத்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இருதரப்பையும் போலீசார் தடுத்து நிறுத்த முயற்சி செய்தபோது தள்ளு முள்ளு ஏற்பட்டது.