தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நோயாளியை ஏற்றவே சென்றேன்: எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மறுப்பு

வேலூர்: அணைக்கட்டு பகுதியில் அவசர ஊர்தியை அனுப்பி பரப்புரைக்கு இடையூறு என்ற எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிற்கு ஓட்டுநர் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் அணைகட்டு பகுதியில் நேற்று எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசிக்கொண்டு இருந்தார்.

Advertisement

அப்போது கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. இதனை கண்டு அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி, நான் ஒவ்வொரு முறை கூட்டத்தில் பங்கேற்கும்போது வேண்டுமென்றே இதேபோன்று ஆளில்லாத ஆம்புலன்ஸை கூட்டத்திற்குள் விட்டு கலாட்டா செய்கின்றனர். இனி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், அதை ஓட்டிட்டு வர்ற ட்ரைவரே அதில் பேஷண்டாக போகிற நிலைமை வரும் என்று பேசினார். இந்நிலையில் அணைக்கட்டு பகுதியில் அவசர ஊர்தியை அனுப்பி பரப்புரைக்கு இடையூறு என்ற எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிற்கு ஓட்டுநர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அணைக்கட்டு மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நோயாளியை ஏற்றச் சென்றேன். பரப்புரைக் கூட்டம் முடிந்திருக்கும் என்பதால் எளிதில் செல்லக் கூடிய வழி என சென்றதாகவும் ஓட்டுநர் விளக்கம் அளித்தார். அணைக்கட்டு மருத்துவமனையில் நோயாளியை ஏற்றிக் கொண்டு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு சென்றதாகவும் ஓட்டுநர் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News