தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புரையோடிய கால்களை எடப்பாடி வெட்டி உள்ளார் ஓபிஎஸ், செங்கோட்டையன் டிடிவி.தினகரன் தறுதலைகள்: ஓ.எஸ்.மணியன் கடும் தாக்கு

நாகப்பட்டினம்: எடப்பாடி முதல்வராக வந்து விடக்கூடாது என ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி.தினகரன் போன்ற தறுதலைகள் ஏதேதோ பேசி கொண்டு உள்ளனர் என அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் ஓ.எஸ்.மணியன் கடுமையாக தாக்கியுள்ளார். நாகப்பட்டினம் அபிராமி சன்னதி திடலில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது.

Advertisement

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை வகித்து பேசியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்தபோது பெண்கள் தங்களது குழந்தையுடன் பேச்சை கேட்க வருவர். கர்ப்பிணிகளும் வருகை தருவர். அதேபோல் தற்போது எடப்பாடி பிரசாரத்துக்கு மக்கள் வருகின்றனர். எடப்பாடி முதல்வராக வர வேண்டும் என தமிழக மக்கள் நினைக்கும் நிலையில், அவர் முதல்வராக வந்து விடக்கூடாது என டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் போன்ற சில தறுதலைகள் ஏதேதோ செய்து கொண்டும், ஏதேதோ பேசிக் கொண்டும் உள்ளனர்.

புரையோடி போன கால்களை மருத்துவர் வெட்ட சொல்வது போல அதிமுகவில் புரையோடிய இவர்களை எடப்பாடி வெட்டி போட்டு இருக்கிறார். கட்சியை விட்டு சென்ற டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுக பற்றி பேச தகுதி இல்லாதவர்கள். எடப்பாடி செல்லும் பாதை சரியான பாதை. 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அரியணையில் அமர வைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement