தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எடப்பாடி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்: அமைச்சர் சக்கரபாணி குற்றச்சாட்டு

சென்னை: உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு உண்மையை மறைத்து தவறான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார். சட்டமன்றத்தில் கொள்கை விளக்க குறிப்பு வைக்கப்பட்ட பின்பு அதாவது ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அந்த நடப்பு கொள்முதல் பருவம் முடிவடையும் நாளான ஆகஸ்ட் 31ம் தேதி வரை கொள்முதல் நடைபெறும். அதற்கான புள்ளி விவரம் அந்த கொள்முதல் குறிப்பில் இடம்பெறாது.இதை புரிந்து கொள்ளாமல் எடப்பாடி பேசி வருகிறார்.

Advertisement

2025-26ம் ஆண்டு 1,892 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 1,59,084 விவசாயிகளிடம் இருந்து 11,77,708 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட தொகை ரூ.2840.25 கோடி. திமுக ஆட்சி காலத்தில் 1.96 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரத்தையும் அவர் கொடுக்கப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்புகளையும் நன்றாக பார்த்து இனிமேலாவது இதுபோன்று உண்மைக்கு புறம்பாக சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று, அன்புமணி வடமாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை விட்டுள்ளார். இது அப்பட்டமான பொய். கடந்த 33 நாட்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2,00,17 மெட்ரிக் டன் நெல்லும், திருவள்ளூர் மாவட்டத்தில் 34,314 மெட்ரிக் டன் நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தேவையற்ற வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தாமல் இருக்க வேண்டும்.

Advertisement

Related News