தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எடப்பாடிக்கு திடீர் உடல்நலம் பாதிப்பு: பிரசாரம் ரத்து

ராஜபாளையம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசார பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ள நேற்று இரவு தென்காசி மாவட்டத்தில் இருந்து ராஜபாளையம் வந்தார். அவருக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். நேற்று இரவு ராஜபாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். விருதுநகர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் 2 நாள் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

Advertisement

முதல் நிகழ்ச்சியாக இன்று காலை 9 மணிக்கு அவர் தங்கியிருந்த ஓட்டலில் விவசாயிகள், செங்கல் உற்பத்தியாளர்கள், நூற்பாலை தொழிலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலநிலை மாற்றத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு உடல் சோர்வு, தொண்டை வலி ஏற்பட்டுள்ளதால், இன்று காலை ஓட்டலில் நடைபெற இருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலையில் ஓய்வெடுக்கும் எடப்பாடி பழனிசாமி, மாலை 4 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ராஜபாளையம் பழைய பஸ் பஸ் ஸ்டாண்ட் காமராஜர் சிலை அருகில் இருந்து பிரசாரத்தை தொடங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News