தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தின்போது பேருந்தை வழிமறித்து அதிமுகவினர் ரகளை: பயணிகள் கொந்தளிப்பு

காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரத்தில் பேசுவதற்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். இரவு 9 மணியளவில் தனது பிரசார வாகனத்தில் முக்கிய கடைவீதி வழியாக சென்று பேருந்து நிலையம் முன்பு பேசினார். அப்போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் அதிமுகவினர் ஈடுபட்டனர்.
Advertisement

இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு தந்தனர். மேலும் பிரசாரம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றதால் வெளியூருக்கு செல்லும் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக அங்கு பேசியதால் பேருந்துகள் புறப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதனை அறிந்த ஓட்டுநர்கள் மாற்று பாதையில் செல்ல பேருந்துகளை இயக்கியபோது அங்கு கூடியிருந்த அதிமுகவினர் ஓட்டுநர்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த காவல் துறையினர், சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அதிமுகவினர் ஏற்க மறுத்த நிலையில் அங்கு கூடியிருந்த பொதுமக்கள், வெகுநேரம் காத்திருந்த பயணிகள் அதிமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. எடப்பாடி பிரசாரத்தை முடித்து சென்றபின் சகஜ நிலை திரும்பியது. இதுகுறித்து பஸ்சில் காத்திருந்த பயணிகள் கூறுகையில், பேருந்து நிலையம் முன்பு பிரசாரத்தை மேற்கொண்டதால் சென்னை மற்றும் பல ஊர்களுக்கு செல்வோர் இரவுநேர தாமதத்தால் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியதாக தெரிவித்தனர்.

Advertisement

Related News