தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜ பொறுப்பாளர்கள் பெயரை தவிர்த்த எடப்பாடி: திருவாரூர் பிரசாரத்தில் வெளியேறிய நிர்வாகிகள்

Advertisement

திருவாரூர்: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தை ஒவ்வொரு மாவட்டமாக மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் விவசாய சங்கங்கள், மீனவநல கூட்டமைப்புகள், அனைத்து வர்த்தக சங்கங்கள், கட்டிட பொறியாளர் சங்கத்தினர், கட்டிட தொழிலாளர் சங்கத்தினர், அனைத்து ஓட்டுநர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் எடப்பாடி கலந்துரையாடினார். தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி வரும் வழியில் விவசாய வயலில் களை எடுத்துக் கொண்டிருந்த பெண் விவசாய தொழிலாளர்களிடம் அவர்களது கோரிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார்.

பின்னர் கொல்லுமாங்குடியில் பெட்ரோல் பங்க் அருகே சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு பெயரளவில் ரோடு ஷோ நடத்தினார். அவரது ரோடு ஷோ மாலை 5.15 மணிக்கு தொடங்கி 5.30 மணிக்குள் முடிவடைந்தது. தொடர்ந்து, நேற்று மாலை திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் பேருந்து நிலையம் அருகே, திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசார வேனில் இருந்துவாறு பிரசாரம் செய்தார். அப்போது பிரதான கூட்டணி கட்சியான பாஜ பொறுப்பாளர்கள் பெயரை எடப்பாடி தவிர்த்தார். இதனால் கூட்டத்தில் இருந்த பாஜ தொண்டர்கள், பொறுப்பாளர்கள் அதிருப்தி அடைந்து பிரசாரம் முடியும் முன்பே கலைந்து சென்றனர்.

போலீசாருக்கு எடப்பாடி மிரட்டல்

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக எடப்பாடி பேசுகையில், ‘பாதுகாப்பு கொடுப்பது காவல்துறை கடமை. இங்கே உயர் அதிகாரி ஒதுங்கி இருப்பதை நான் கண்கூடாக பார்த்தேன். அதிகாரிகள் ஆகிய நீங்கள் ஒவ்வொரு மக்களும் செலுத்தும் வரிப்பணத்தில் தான் சம்பளம் பெறுகிறீர்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு நீங்கள் உங்களது கடமைகளில் இருந்து தவறினால் அதற்கான பலனை நிச்சயம் அனுபவப்பீர்கள். ஆட்சி மாற்றம் வரும். கீழே உள்ள சக்கரம் மேலே வரும். நீங்கள் நடுநிலைமையோடு இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான் காவல்துறை அதிகாரிகளை மதிக்கின்றவன். நான் முதலமைச்சராக இருந்தபோது அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement