தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குரங்கு கையில் பூமாலை போல எடப்பாடி கையில் அதிமுக: டிடிவி தினகரன் விமர்சனம்

 

Advertisement

மதுரை: குரங்கு கையில் பூமாலை போல எடப்பாடி கையில் அதிமுக உள்ளது என டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக மதுரை சோழவந்தான் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்; 2026 தேர்தலில் மோசமான தோல்வியை எடப்பாடி பழனிசாமி சந்திக்கப் போகிறார். தகுதியில்லாத எடப்பாடி பழனிசாமி தகுதி உள்ள மூத்த நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்குகிறார். தென் தமிழ்நாட்டு மக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு உரிய பாடத்தை புகட்டுவார்கள் . அதிமுகவின் விதிகளை புறந்தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமிக்கு சுயநலத்தை தாண்டி எதுவும் இல்லை. குரங்கு கையில் பூமாலை போல எடப்பாடி கையில் அதிமுக. துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு என்னை நேருக்கு நேர் சந்திக்க தைரியம் இல்லை. அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றே சசிகலா கூறி வருகிறார். எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களித்த 18 எம்.எல்.ஏ.க்களை எப்படி துரோகி என்று அவர் சொல்ல முடியும். சிறையில் இருந்து சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமிதான் துரோகி. செம்மலை போன்றோர் எடப்பாடியை ஏற்க மறுத்து வெளியே சென்றுவிட்டார்கள்.

18 எம்.எல்.ஏ.க்களை நீக்கிய எடப்பாடி துரோகியா? நாங்கள் துரோகியா? பொதுச்செயலாளராக தொடர்வதற்காக கட்சி விதிகளை மாற்றி, ஹிட்லரை போல செயல்படுகிறார் எடப்பாடி. கூவத்தூரில் பதவி கொடுத்த சசிகலாவை இன்று துரோகி என்கிறார் எடப்பாடி பழனிசாமி. கொள்ளிக்கட்டையை எடுத்து தன் தலையை தானே சொரிந்து கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி. தென் தமிழ்நாட்டு மக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு உரிய பாடத்தை புகட்டுவார்கள். தேவர் ஜெயந்திக்கு வந்த செங்கோட்டையனை நீக்கிய எடப்பாடிக்கு தென்தமிழகம் தக்க பாடம் புகட்டும்.

2021 தேர்தலைவிட மோசமான தோல்வியை தென்தமிழகத்தில் 2026 தேர்தலில் எடப்பாடி சந்திப்பார். 2024 தேர்தலில் 3, 4ம் இடங்களுக்கு அதிமுகவை கொண்டு சென்றவர் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார்.

Advertisement

Related News