தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எடப்பாடி பிரசாரத்தில் அடாவடி ஆம்புலன்ஸ்சுக்கு வழிவிடாமல் காரை குறுக்கே நிறுத்தி அதிமுகவினர் மறியல்

தென்காசி: அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரத்தை நேற்று தென்காசியில் மேற்கொண்டார். இதற்காக அவரை வரவேற்று தென்காசி நகர் முழுவதும் ஏராளமான கொடிகளும் பேனர்களும் அனுமதியின்றி வைத்திருந்தனர். இதனால் தென்காசி - திருநெல்வேலி சாலையில் வேட்டைக்காரன் குளம் அருகில் நேற்று மாலை அதிமுகவினர் வைத்திருந்த கொடிகளை போலீசார் அகற்றியதாக கூறி அதிமுகவினர் சிலர் சாலையின் குறுக்கே தங்களது காரை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

Advertisement

இதனால் பயணிகள் பேருந்து மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கிக்கொண்டது. பேருந்துகளில் பயணம் செய்த பெண்கள் சிலர் மறியலில் ஈடுபட்ட கட்சியினரிடம் மறித்து நிறுத்தப்பட்டிருந்த காரை அகற்றுமாறு கூறினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காசி டிஎஸ்பி தமிழ் இனியன் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் தென்காசி-திருநெல்வேலி சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

Advertisement

Related News