தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எடப்பாடி பழனிசாமி தலைமையை விஜய் ஏற்றுக் கொண்டால் தற்கொலைக்கு சமம்: டி.டி.வி. தினகரன் பேட்டி!

சிவகங்கை: எடப்பாடி பழனிசாமி தலைமையை விஜய் ஏற்றுக் கொண்டால் தற்கொலைக்கு சமம் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்களின் 224வது நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் அவர்களது சிலைகளுக்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், திருப்பத்தூரில் மருதுபாண்டியர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisement

பின்னர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; எடப்பாடி பழனிசாமி தலைமையை விஜய் ஏற்றுக் கொண்டால் தற்கொலைக்கு சமம். கூவி கூவி அழைக்கும் கல்லாப்பெட்டி பழனிசாமியை தோளில் தூக்கி வைத்து கொள்ள விஜய் வருவாரா?. தொண்டர்களை உற்சாகப்படுத்த பழனிசாமி ஏதேதோ கூறி வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் துரோகத்துக்கு அவர் நிச்சயம் தேர்தலில் வீழ்த்தப்படுவார். தேர்தல் நேரத்தில் வியப்பை ஏற்படுத்தும் அளவுக்கு கூட்டணி உருவாகும். விஜய் தலைமையில் கூட்டணி அமையும் என்றேன்; விஜயுடன் கூட்டணிக்கு செல்வோம் என சொல்லவில்லை. கூட்டணிக்கு வாங்க வாங்க என எடப்பாடி பழனிசாமி கூவி கூவி அழைப்பதை தமிழக மக்கள் நகைக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.

Advertisement

Related News