தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எடப்பாடி சொல்றத நாங்க கேட்போம்: திண்டுக்கல் சீனிவாசன்

 

Advertisement

திண்டுக்கல்லில் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து நேற்று மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ‘‘செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்கு 10 நாள் கெடு விதித்துள்ளாரே’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு திண்டுக்கல் சீனிவாசன், ‘‘அவர் என்ன சொல்லியிருக்காரு. எல்லோரும் இணைய வேண்டும்னு சொல்றாரு. அதுக்கு பொதுச்செயலாளர் முடிவு எடுக்கணும்னு சொல்லியிருக்காருல.

அதுதான் எங்களுடைய கருத்தும். பொதுச்செயலாளர் கருத்துக்கு மாற்றுக் கருத்து எல்லோரும் சொல்லிக்கிட்டு வர்றாங்க. ஆனா, நாங்கள் பொதுச்செயலாளர் கூறும் கருத்துக்கு கட்டுப்படுறோம்’’ என்று தெரிவித்தார்.

மேலும், ‘‘முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் சென்று பொதுச்செயலாளர் எடப்பாடியை சந்தித்து ஒன்றிணைய வேண்டும் என்று கூறியதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளாரே’’ என்ற கேள்விக்கு, ‘‘அதெல்லாம் விட்டுருப்பா. அது இயற்கையா நடந்தது. அது உண்மையா இல்லையா என்பது எனக்கு தெரியாது. இத்தோட முடித்துக் கொள். செங்கோட்டையன் முடிவை அவர் கூறுகிறார். எங்களது முடிவு பொதுச்செயலாளர் எடுப்பதே’’ என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Advertisement

Related News