தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈக்வடார் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 14 பேர் பலி: 14 பேர் காயம்!!

மச்சாலா: தெற்கு ஈக்வடாரில் கும்பல் சண்டையால் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர். ஈக்வடார் நாட்டில் குவாயாகுவிலுக்கு தெற்கே உள்ள துறைமுக நகரமான மச்சாலாவில் ஒரு சிறைச்சாலை உள்ளது. அதில் அடைக்கப்பட்ட கைதிகள் நேற்று முன்தினம் ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர். அப்போது அதை தடுக்க சென்ற காவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த மோதலில் கைதிகளும் கொல்லப்பட்டனர். மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர். இதனை காவல்துறைத் தலைவர் வில்லியம் காலே உறுதிப்படுத்தினார்.

Advertisement

கைதிகள் உள்ளே இருந்து கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர், குண்டுகள், கையெறி குண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், சில கைதிகள் தப்பினர். இதுவரை 13 பேர் மீண்டும் பிடிபட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு, அதிகாரிகள் சிறைச்சாலையின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்ற முடிந்தது என்று காலே கூறினார்.

ஈகுவேடாரில் லாஸ் கொனரோஸ் மற்றும் லாஸ் லோபோஸ் ஆகிய இரு பெரும் போதை பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவது வழக்கம். அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சிறைகளில் அடிக்கடி மோதி கொள்வார்கள். இந்நிலையில், அவர்கள் ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர். சமீபத்திய ஆண்டுகளில் சிறைக் கலவரங்களால் ஈக்வடார் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கைதிகள் கொல்லப்பட்டனர். 2021ம் ஆண்டு சிறையில் நடந்த மோதலில், 100-க்கும் மேற்பட்ட கைதிகள் பலியானார்கள். 2021ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து இதுவரை 500 கைதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களின் உடல்கள் துண்டுகளாக்கப்பட்டு, எரிக்கப்பட்ட கொடூர சம்பவங்களும் நடந்துள்ளன.

Advertisement

Related News