தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெலங்கானாவில் நடைபயிற்சியின்போது இ.கம்யூ நிர்வாகி சுட்டுக் கொலை

Advertisement

ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாலக்பேட்டில் உள்ள சாலிவாஹன நகர் பூங்காவில் இ.கம்யூ கட்சியின் மாநில கவுன்சில் உறுப்பினர் சந்து நாயக் என்ற சந்து ரத்தோட், அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து அவரது கண்களில் மிளகு தூள் வீசியது. பின்னர் கூட்டத்தில் இருந்த ஒருவன், துப்பாக்கியால் சந்து ரத்தோட்டை சுட்டான். சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சந்து ரத்தோட் சரிந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. சந்து ரத்தோட்டின் மனைவி, இந்த கொலைக்கு சிபிஐ (எம்எல்) கட்சியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருடனான நீண்டகால பகைமையே காரணமாக இருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியல் பகைமை, தனிப்பட்ட பகை உள்ளிட்ட பல கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தெலங்கானாவில் அரசியல் வன்முறை குறித்த விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

Advertisement